Sunday 21 July 2013

















நிழல்கள் அனைத்தையும் நிஜம் என்று நம்புகின்றேன்
அவை நிழல் என்று தெரியாமல்..
நிழல் அல்ல நிஜம் தான் என எண்ணி
அவற்றை என் அருகினில் அமர வைத்து கனவுகள் காண்கிறேன்..

என்ன தான்  வேண்டும் இந்த மனசுக்கு
தேவைகள் அனைத்தும் தெரிந்த இடத்தில் கிடைத்தாலும்
தெரியாத இடத்தில் மட்டுமே அவற்றை தேடி அலைகின்றது
ஆம்.. பாலைவனத்தில் நீர் தேடி வழிதெரியாமல் அலைகின்ற
வழிப்போக்கனைப் போல..

எனக்கு  நானே சில நேரங்களில் பேசிக்  கொள்கிறேன்
என்னை  நானே சமாதானப் படுத்திக் கொள்கிறேன்..

என்னுள் ஒருவன் கண்ணீரை துடைக்கவும்
சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளவும்..
இளைப்பாறும்  தாயின் மடி அவன் பறித்துக் கொடுத்தது..
பயணம்  நடுவே சிறு நிழற்குடை அமைக்க தந்தையைப் போல
உரையாடல் நடுவே சிறு ஊடல் கொண்டு
அந்த ஊடலில் சிறு பதிலுரைத்த நண்பன்..

என் உயரிய தோள்கள் வலி பெரும் வேலையில்
எனை சுமந்து செல்லும் காதலன்..
என் கைகள் அவனை தேடும் வேளைகளில்
என் கண் முன்னே ஒரு காட்சி பிழையாய்

சாரல் கொண்ட நேரங்களில் அவன் நெஞ்சம் மட்டும்
போதுமென்றே  இளைப்பாரிடுவேன்..

ஒரு SMS -ல்  படித்து போல அவன் முதுகுக்கு பின்னால்
அவனை தட்டி கொடுக்க வேண்டும்..
காதலியாக..
அவன் முகத்துக்கு முன்னாள் கை தட்ட வேண்டும்
ரசிகையாக..

அடிக்கடி எனை கேட்கின்றாய் எங்கே செல்ள்ளலாமென்று..
இப்படி கேட்கும் தருணம் நான் கூற வருவது
எங்காவது  கூட்டி செல்லேன்..
ஏனெனில் உன்னோடு எங்கு சென்றாலும்
அது எனக்கு Happy  Journey  தான்..

இனி தலையணை வேண்டாம் உன் தோழ்கள் போதும்
என் தலை சாய்க்க..
இனி இரவுகள் வேண்டாம் உன் கண்கள் போதுமடா
நான் இளைப்பாற..

நாள்தோறும் இனி கூறிடுவேன் உன்னிடம்
I Love You என..

                                                                              -வித்யாதீபக்















கூர்தீட்டிய வாளில்லை
ஆனாலும் எனை குத்தி கிழிக்கின்றது
உன் பார்வை..
எரிகின்ற தீபம் இல்லை
ஆனாலும்  எனை எரித்து சாம்பலாக்கியது
உன் மௌனம்..
விஷமொன்றும் தேவையில்லை
எனை மண்ணில் வீழ்த்தியது
நீ அருகில் இல்லாத நாட்கள்..










மழைத்துழி என் முகம் தொடும் நேரம் 
உன் ஸ்பரிசம் வேண்டி கேட்கின்றேன்..
கை கோர்த்து சிறுது தூரம் 
நடந்தாயடா.. அந்த பாதை தான் ஏனோ
சின்னதாய் அமைந்தது.. 
இடைவெளி இது போதுமாடா 
இனி ஏக்கங்கள் வேண்டாம் வந்திடடா 
நமை இணைத்த மழைக்காலம் 
மீண்டும்  வந்துவிட்டது..

Tuesday 16 July 2013



















உன் முன்னே கை கைகட்டி நிற்கும் 
தலைவி அல்ல நான்..
உன் பின்னால் கை கட்டி வாழும் 
ரசிகை நான்..

















புத்தகங்கள் என்னை 
கேலி செய்கின்றன 
என்னை படிக்காமல் 
அவன் இதயத்தை படிக்கிறாயே என்று..











வாழும் இவ்வுலகில் அனைவரின்
கைக்குழந்தை













புத்தகம் விற்று 
தன்  தங்கையின் 
பசியினை போக்கும் 
ஏழை மாணவனின் 
கண்ணீரில் வாழ்கிறாள்
இந்த கல்வித்தாய்..











அவள் உயிரில்
என் உலகம் பிறந்தது
எனக்கான முதல் பொழுதும்,பார்வையும்
அவளிடமிருந்தே தொடங்கியது
இனியொரு தரம்
என் கை கோர்த்து இணைகிறாள்
என் முதல் தோழியாய்..
விடியல் 
 











அழகான கைகளுடன் அணைக்கும் என் காதலன் 
மிதமான  வெளிச்சம் தான் ஆனால் 
இனி தொடங்கும் என் வாழ்வுக்கான புதிய 
கருவறை வெளிச்சமாய் விடியட்டும்  
இந்த காலைப்பொழுது.
கோவில் 


















அனைவரும் தன்  கவலையை 
கூறுவதற்கு  சென்றனர்
தெய்வமோ தன்  கவலையைக் 
கூற முடியாமல் 
சிலையாக நிற்கின்றது.

Tuesday 9 July 2013


தினமும் உன்னை காண்கின்றேன் 
காணும் அனைவரின் காதலும் 
நிறைவேறியது..
நீ மட்டும் தனியாய் உறங்குகிறாய் 
நட்சத்திரங்களோடு..
உன்னுடைய பெயர்  பழுதாகாமல் இருக்க
இறந்தவர்களின் பெயரை தூற்றாதே..
                                                    
                                                    -அலெக்சாண்டர்

அச்சத்தில் எப்போதும் இருப்பதை விட
ஆபத்தை  ஒருமுறை சந்தித்து
பார்ப்பது நல்லது..

                                                   -பிராங்க்ளின்

நம்பிக்கை மட்டும் இருந்தால் போதாது
சிந்திக்கவும் தெரிய வேண்டும்..
  
                                                   -சாக்ரடீஸ்

Saturday 6 July 2013

Mazhalai

காதல் மழலை 

உனது பார்வையில் வீழ்ந்த எனது உயிர்
நம் மழலையின் பார்வையில்தான்
மீண்டெழுந்தது 

Enathul Oruthi..


மழையில் உனக்கு துணையாய்
சாரல்கள் இருக்கட்டும்
குளிரில் உனக்குத் துணையாய்
பனித்துளி இருக்கட்டும்
சித்திரையில் உனக்குத் துணையாய்
நிழல் இருக்கட்டும்

இரவில் உனக்கு துணையாய் நானிருப்பேன்
இவையாவும் பிரிந்தாலும்
நான் உனைப் பிரியமாட்டேன்..

PASSBOOK-The Real Love Story

PASSBOOK

 

   ஸ்வேதா வேக வேகமாக டிபன் செய்து விட்டு கார்த்திக்-ஐ  எழுப்பினாள். "கார்த்திக் எழுந்திரு டைம் 7 ஆச்சு" என்று கூற மெதுவாய் தன கண்களைத் திறந்து ஈரத்தலையுடன் பொட்டு வைத்துக் கொண்டிருந்த தன்  மனைவியை கண்டு 'குட் மார்னிங் டார்லி' என்றான்.

 கார்த்திக்,ஸ்வேதா இருவரும் காதல் செய்து பெற்றோர்  அனுமதிக்காததால் பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் அவசரமாக எழுந்து washroom சென்றான். 

'இட்லி ரொம்ப சூப்பர் லைக் யுவர்' - என ஆரம்பித்தவுடன் போதும் போதும் சாப்டு சீக்கிரம் கெளம்புங்க என செல்லமாய் கூறினாள்.. ஷூ  போட்டபடி bye சொல்லி கிளம்பினான்.

   மதியம் சமையல் செய்து கொண்டிருந்த வேலையில் doorbell சத்தம் கேட்டு திறந்தவள் தன்  தாயை கண்டதும் 'வா மா இப்பதான் உன் என் ஞாபகம் வந்ததா' என கேட்டாள். 'அப்பா கொஞ்ச நாள் வீட்லதா இருந்தாரு இன்னைக்கு தா ஆபீஸ் போனாரு அதாமா வர முடியல என்றபடி அமர்ந்தால். இருவரும் நலம் விசாரித்து விட்டு அணைத்து வேலைகளும் ஓய்ந்து தாய் கிளம்பும் நேரம் 'இது உன் அலமாரில இருந்தது உன் அப்பா கண்ல படாம இத எடுத்துட்டு வந்தேன்'.

  இது எதுக்கு மா அவருக்கு வர சம்பளம் எங்க செலவுக்கே பத்த மாட்டேன்குது இதுல bank ல வேற போடா எங்கமா போறது'..

  அப்படி சொல்லாத ஸ்வேதா நீங்க எப்போலாம் சந்தோஷமா இருக்கீங்களோ அப்பலாம் இதுல உங்களால முடிஞ்சது ஐம்பதோ, நூறோ savings ல போடுங்க அது உங்களுக்கு உதவும்னு சொல்லி கொடுத்துட்டு போனாங்க.

   அன்று முதல் அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்களின் போதெல்லாம் 100,200 என பதிவு செய்து வந்தால்.. ஸ்வேதாவுக்கு வேலை கிடைச்சதுக்கு 2000 கார்த்திக் promotion-கு 6000 என பதிவு செய்தனர். 

  எல்லோர் வாழ்வையும் போல அவர்களது வாழ்விலும் சந்தேகங்கள் சண்டைகளும் வந்து சென்றன. அனைத்தையும் அவள் அம்மாவிடம் சொல்லி அழுவாள் அவளும் ஒவ்வொரு முறையும் அறிவுரை கூறி செல்வாள்.

   சண்டைகள் சர்சைகளாகி ஏன்தான் நாம லவ் பன்னோமோனு divorce  செய்து கொள்ளும் முடுவுக்கு வந்தனர். தன் தாயிடம் அனைத்தையும் கூறி அழுதாள்.  ஆறுதல் கூறியபடி 'சரி அந்த passbook-ல சேர்து வச்ச பணத்த withdraw பண்ணி share  பண்ணிக்கோங்க'  என கூறினாள். 

   வீட்டிற்கு போகும் வழியில் bank  சென்ற போது cash  counter -ல் வரிசையில் நின்றபடி passbook- ஐ  திறந்து பார்த்தாள். ஒவ்வொரு பதிவையும் பார்த்த பொழுது தங்களது சந்தோமான நினைவுகளை  நினைத்து அழுதபடி வீட்டிற்கு சென்றாள்.

  Divorce paper -ஐ நீட்டி இதுல sign பண்ணு என்றான். கண்ணீரைத் துடைத்தபடி 'இந்தாங்க நம்ம account - இருக்க cash -ஐ withdraw  பண்ணிட்டு வாங்க அபாரம் sign பண்றேன்'என்றபடி passbook -ஐ நீட்டினாள்.

  இப்ப கூட உனக்கு இந்த பணம் தான் முக்கியம்ல என்றபடி சென்றான்.

இரவு  வெகு நேரம் கழித்து வந்து ஸ்வேதாவிடம் passbook -ஐ தந்துவிட்டு அமைதியாய் தன் அறைக்கு சென்றான். ஸ்வேதா மெதுவாக அதை திறந்து பார்த்த பொழுது அதில் 10,000 ருபாய் பதிவு செய்யபட்டிருந்த ரசீதை எடுத்து பார்த்தாள் .

  அதன் பின்னால் 'இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ஸ்வேதா, நீ என் life -ல எவ்ளோ முக்கியமானவனு  இன்னைக்கு தெரிஞ்சுகிட்டேன். passbook -ல மட்டும் சந்தோஷங்களையும் நினைவுகளையும் பதிவு செஞ்ச நம்ம ரெண்டு பேரும் ஏன் அத நம்ம மனசுல பதிவு செய்ய மறந்தோம், Now I promise you that I'll be your best friend and make you happy forever Don't leave me forever my darle..' என்று எழுதி இருந்தது.

  அறைக்கு சென்ற ஸ்வேதா அவனை பார்த்து 'ஏய் hero மறுபடியும் love பண்ணலாமா' என்றாள் சிரித்தபடி.. அவளை பார்த்து சிரித்தபடி sure but  மறுபடியும் சண்டைபோடாம..என்று இருவரும் கண்ணடித்து கொண்டனர்.

            ........................................................................................................................

               Everyone have to save their sweet memories in their passbook called life with love

           ........................................................................................................................
 

Thursday 4 July 2013

பாட்டியம்மா


கதைகள் மட்டும் கேட்கவில்லை
உன்னிடம் தான் கற்று கொண்டேன் தாலாட்டு பாடலையும்
இரவு முழுதும் கேட்ட சத்தம்
அது உன் பாக்கு இடிகியின் சத்தம்
எதுவாயினும் உன்னிடம் சொன்னால்
கற்று கொடுப்பதோடு  தட்டியும் கொடுத்தால்
என் பரம்பரையை காட்டி கொடுத்த பாட்டியம்மா..

சுட்டு கொடுத்த பனியாரமும்
கற்று கொடுத்த தாலாட்டும்
தான் அவள் பரிசுகள்
என் தாய் வீட்டு சீதனமாய்..