Monday 28 May 2012

நீளமான ஒரு பயணம்:

தொட்டிப்பாலம்..
ஆசியாவின் மிக நீளமான ஒரு பாலம் தான் தொட்டி தொங்கும் மத்தூர் பாலம்.
115 அடி நீளமும் ஒரு கிலோ மீட்டர் நீளம் உயரம் கொண்ட இப்பாலம் தற்போது ஒரு சுற்றுலா தலமாக அமைந்து உள்ளது.



1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் சுற்றுலா தளமாக தற்போது மாறிவிட்டது
மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த இடத்திற்கு வருகை புரிகின்றனர். 
இந்த மத்தூர் தொட்டிப்பாலம் , திருவத்தூர் பஞ்சாயத்து ஒன்றியத்தில் அருவிக்கரை வருவாய் கிராமத்தின் குக்கிராமமாக அமைந்துள்ளது.

12,90 / - லட்ச செலவினில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் பாலம் மீது தொட்டி கால்வாய்(பட்டனம்கள் கால்வாய்) ஒரு மலையின்ஒரு பக்கத்தில் இருந்து ஒரு மலையின் மற்ற பக்கம் பாசன நீர் கொண்டு செல்கிறது. தொட்டி ஏழு அடி ஆறு அங்குல அகலம் மற்றும்  ஏழு அடி உயரத்தில் அமைந்துள்ளது.



கால்வாய் 28 பெரிய தூண்களைக் கொண்டு தாங்கி நிற்கின்றது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கே காமராஜ், அவர்கள் இந்த கால்வாயினை  ஒரு வறட்சி நிவாரண நடவடிக்கைக்காகவும்  மற்றும் விளவன்கோடே மற்றும் கல்குளம் தாலுக்காவின் விவசாய வளர்ச்சிக்காகவும்  கட்டப்பட்டது. மாவட்டநிர்வாகம் சமீபத்தில் மேலிருந்து பாலம் கீழே ஒரு மாடி படிக்கட்டு போட மேலும், இங்கு ஒரு சிறுவர் பூங்கா மற்றும் குளியல் தளங்களுடன் அமைத்து தந்துள்ளது.

கடந்த வந்த பாதை
திருவனதபுரத்தில் மேற்கொண்ட பயணம் அது கோபுரம் முகப்பு என அமைந்த இந்த  கோவிலில் விசேஷசாமான எனது அனுபவம் :
இந்த கோவிலில் அனந்தன் உள்ள அறையை காண மூன்று அறைகள் அமைந்திருக்கும் அதன் வழியே தலை உடல் பாதம் என த னித்தனியே மட்டுமே காண முடியும் ஒன்றாக காண அனுமதி இல்லை.

அனந்தன் எனும் பாம்பின் மீது திருமால் பள்ளி கொண்டிருப்பதாலேயே திருவனந்தபுரம் எனும் பெயர் பெற்ற இந்த தலத்தில் பழம்பெரும் சேரர் குலத்தைச் சேர்ந்த சேரமான் பெருமான் எனும் மன்னன்தான் இந்தக் கோயிலை முதன்முதலாக எழுப்பியதாக வரலாறு சொல்கிறது. அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துகளையும் நிர்வாகத்தையும் "எட்டு வீட்டில் பிள்ளைமார்" எனும் உயர் சாதியைச் சேர்ந்த அதிகாரம் மிக்க ஜமீன்தார்கள்தான் தங்கள் கைகளில் வைத்துள்ளனர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னரான ராஜா மார்த்தாண்ட வர்மா, இந்தப் பிள்ளைமார்களின் வம்சத்தைப் போர் மூலம் தோற்கடித்து தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். அத்துடன் கோயிலையும் புதுப்பித்தார். கடைசியில் மார்த்தாண்ட வர்மா தன்னுடைய அரச பதவியை பத்மநாபசுவாமியிடம்(?) ஒப்படைத்து இறைப்பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னர் இந்தக் கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அரச பரம்பரையின் வசமே இருந்து வந்துள்ளன.
இக்கோயிலின் கணக்கில்லாத சொத்துகளை இஸ்லாமியர் உள்ளிட்ட அன்னியப் படையெடுப்பாளரிடமிருந்து காப்பாற்றுவதற்காக கோயிலில் ஆறு பாதாள அறைகளை உண்டாக்கி அவற்றில் இச்செல்வங்களை வைத்துப் பராமரித்துள்ளனர். குறிப்பாக திப்பு சுல்தானிடமிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரச பரம்பரையினர் கூறுகின்றனர். கோயிலின் மூலவரான அனந்த பத்மநாபரின் சிலையே முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது. அவர் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஒவ்வொன்றும் (பூணுல் உட்பட) தங்கத்தால் ஆனவையே. காட்டுச் சர்க்கரை யோகம் எனும் வெளிப்பூச்சை சிலையின் மீது பூசி இஸ்லாமியரின் பார்வையிலிருந்து அது மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோயிலுக்குச் சொந்தமான இன்னும் ஏராளமான செல்வங்கள் கோயில் வளாகத்தில் உள்ள ஆறு பாதாள அறைகளில் மறைத்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கும் மேலாகத் திறக்கப்படாமல் இருந்து வந்த அந்தப் பாதாள அறைகள் திறக்கப்பட்டு அவற்றில் இருப்பவற்றை உலகறியச் செய்ய வேண்டுமென்று டி.பி.சுந்தரராஜன் எனும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் இந்த வழக்கை எதிர்த்து மனு செய்தனர். ஆனால் அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம் அந்த அறைகளை ஒரு குழு அமைத்துத் திறக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த ஜூன் 27ம் தேதி தன்னுடைய ஆய்வைத் தொடங்கியது.
இந்தக் குழுவினரின் நடவடிக்கைப்படி கோயிலின் பாதாள அறைகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு அவற்றிலிருந்த விலை மதிப்பில்லாத சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இந்தக் கணக்கு விபரங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளிக்கின்றன. தங்கத்தாலான பெருமாள் சிலை, பெரும் மதிப்புள்ள வைர, வைடூரிய நகைகள், கிலோ கணக்கில் தூய தங்கத்தாலான நகைகள், தங்க நாணயங்கள் என ஒரு பெரும் புதையலே சிக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி இதுவரை திறக்கப்பட்டுள்ள ஐந்து அறைகளில் கிடைத்துள்ள செல்வங்களின் மதிப்பு மட்டும் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. கோயிலைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக உள்ள ஆறாவது அறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த அறை திறக்க முடியாத அளவுக்கு பலம் பொருந்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அறையைத் திறப்பது ஆகமவிதிகளுக்கு முரணானது என்று கூறி அதைத் தடுக்கும் முயற்சியில் கோயில் நிர்வாகம் இறங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்படுவதை எதிர்த்து மன்னர் குடும்பம் உச்ச நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியுள்ளது. அந்த அறை திறக்கப்பட்டால் அங்கு புதைந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு மேலும் சில புதிய அதிர்ச்சிகளை அளிக்க வாய்ப்புள்ளது. ஆறு அறைகளில் கடைசி இரண்டு அறைகள் கடந்த 136 ஆண்டுகளாகத் திறக்கப்படாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலின் குளத்திலும் பெரும் புதையல் மறைந்திருக்கலாம் என்று கேரளாவைச் சேர்ந்த வரலாற்றறிஞர் பிரதாப் கிழக்கே மடம் கூறியுள்ளார். இக்கோயிலில் மொத்தம் ஒன்பது ரகசிய அறைகள் இருப்பதாகவும், தற்போது தெரியவந்துள்ள ஆறு அறைகள் தவிர, மேலும் மூன்று அறைகள் குளத்துக்குள் கிணறு வடிவில் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அந்தக் காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா ஆற்றிலிருந்து சாலகிராம் எனும் ஆயிரக்கணக்கான புனிதகற்கள் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு, அவற்றைக் கொண்டு பத்மநாபசுவாமி அனந்த சயனத்தில் இருப்பது போன்ற போன்ற மூலவர் சிலை செய்யப்பட்டது. பின்னர் எஞ்சியிருந்த கற்களும் நகைகளும் குளத்தில் உள்ள கிணறுகளில் போடப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு பெரும் அதிர்ச்சிக்கு நாடு ஆளாக வேண்டியிருக்கும்.
திருநங்கை

ஆணும் பெண்ணும் சரிசமம்
எனும் வாக்கியத்தை படித்து
பிரம்மன் படைத்த சிலைகள்..

சில நிமிடங்கள்..


உன்னுடன் வாழ்ந்த சில நிமிடங்கள்
மறவாது என்றும்..

நாம் சந்தித்த முதல் தருணம்
நீ பார்த்த முதல் பார்வை,
மறவாது என்றும்..

பேசிய முதல் தருணம்
நாம் பேசிய முதல் வார்த்தை,
மறவாது என்றும்..

காதல் தான் என தெரியாமல்
நட்பை தொடங்கிய
நம் முதல் நாட்கள்,
மறவாது என்றும்..

உறங்கிய மனிபோழுதுகள்
உன்னையே நினைத்தேன்
நீ கூட என்னை நினைத்து கொண்டு இருகிறாய்
என்பதை அறியாது
உறக்கத்தில் வந்த நம் முதல் கனவு,
மறவாது என்றும்..

காதலித்த முதல் நாள்
பேருந்தில் அமர்ந்த போது
நான் கண்ட உன் முதல் ஸ்பரிசம்
மறவாது என்றும்..

நீ அருகில் இருந்த நேரத்தில்
என் கைகளில் நீ அளித்த
முதல் முத்தம்,
மறவாது என்றும்..

காதலில் இருந்த நாம் இருவரும்
கை கோர்த்து திரிந்த நாட்கள்,
மறவாது என்றும்..

காதலியாய் மட்டுமல்ல
காலமெல்லாம் துணையாய்
நாம் இருக்க
கைகள் நடுங்கிய படி
நீ போட்ட முதல் முடுச்சு,
மறவாது என்றும்..

இன்றும் உனக்காக
நான் வைக்கும் குங்குமம்
மறவாது என்றென்றும்..

இன்றும் என்னுடன் காதலுடன் கைகோர்த்து
உலா வரும் கணவனாய் மட்டுமல்ல

என் காதலனாய் மட்டுமல்ல
என் தோழனாய் மட்டுமல்ல
என் வாழ்வில் அனைத்து நிமிடமும்
என் நிழலாய் நீ தொடர்வது
மரணம் என்னை சூழும் நேரத்திலும்
மறவாது என்றென்றும்...
தொலைத்தோம் இங்கு


நாம் வாழ்ந்த நாடு தான்
நாடகமாய் மட்டுமே..
அரசனும் அழிந்து அரசியலும் வந்தது..
அரசியலும் இன்று நம்மை
அடிமைகளாய் அமைத்தது..
மனங்களை களவாடிய மனிதன்
இன்று மண்ணை கலவாடினான்
மண்ணும் பணமும் தான்
மானிடனின் உழைப்பு
என்றால் இனி உன்னை தொலைத்து
ஒழிந்தது போதும்..

புதிதாய் ஒரு வழி அமைத்திடு
வலியினை வல்லமைகளை மாற்றிடு..
தொலைத்து போதும் இனி புதிதாய் ஒரு உலகை தேடி
அதில் உனக்கென ஒரு தடம் பதித்திடு..
கனவில் ஒரு காதல்





எழுத முடியாத வார்த்தைகள்
இன்று உன் முகவரி ஆனது..
வரைய முடியாத ஓவியம்
இன்று உன் உருவமானது..
பார்த்தது ஒரு முறை தான்
ஆனாலும் இன்னும் பார்க்க துடிகிறேன்..
என் கனவில் மட்டும்
வந்து சென்ற என் காதலை..
காதல் சிற்பம்

உன் இதயம் கல் என்பதால்
நான் சிற்பியாக மாற
வேண்டும் அதை என் காதலுக்கான
சிற்பமாக மாற்றுவதற்கு...